Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

ஆன்லைன் அபராத முறையைக் கைவிடக்கோரி சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் அபராத முறையைக் கைவிடக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கே.அய்யப்பன், பொருளாளர் எம்.முத்துகிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயளாளர் சி.மாரிக்கண்ணு, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் க.ரெத்தினவேல், ஏ.முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.

ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வேண்டும். புகைச்சான்று மற்றும் ஸ்டிக்கருக்கு அநியாய வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது.

மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். பண்டிகைகால முன்பணம் வழங்க வேண்டும்.  நலவாரியத் தின் மூலம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top