Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

களப்பயணமாக உழவர்சந்தைக்கு வந்த மழலைக் குழந்தைகள்

புதுக்கோட்டை

உழவர் சந்தைக்கு களப்பயணமாகச் சென்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலைக் குழந்தைகள்

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள்; களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மழலைக் குழந்தைகள் உழவர்சந்தையின் காய்கறிக்கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கத்தரிக்காய் மற்றும் பழங்களின் பெயர்களை யும் விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
உழவர் சந்தையில் மழலையர்

விற்பனை செய்யும் கிராமத்து விவசாயிகளும் அன்போடு வரவழைத்து, அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, பப்பாளி ஆகியவற்றைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி  கூறுகையில் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல பாடங்களில் படங்களில் உள்ள பொருட்களை நேரடியாக கண்டு மாணவர்கள் அறிந்துகொள்ள இதுமாதிரி களப் பயணங்களை தொடர்ந்து எங்கள் பள்ளியில் முன்னெடுக் கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை

உழவர் சந்தைக்களப் பயணத்தில் ஒருங்கிணைப்பாளர் கோமதிபிள்ளை, ஆசிரியைகள் சந்திரகாலா, பௌலின், சரசு ,பூரணி, யுவராணி, அனுராதா, விஷாலி, மற்றும்ஆசிரியர்கள்; உதயகுமார், ராமன், காசாவயல்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பத்திரமாக களப்பயணத்துக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top