Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

விநாயகர் சதுர்த்தி: ஈரோட்டில் 1008 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு !!

ஈரோடு

ஈரோட்டில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் 35 ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை ஈரோடு ஆயிர நகர வைசிய திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்துக்களின் பண்டிகை களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர்த்து விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் நல்ல முறையில் கொண்டாடுவதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

.உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்டு 80 அடி திட்டச்சாலை யை அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நக்சல் தீவிரவாதி களுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், சில நக்சல்வாதிகளை ஈரோடு மாநகரில் கைது செய்திருப்பதும் ஈரோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் நக்சல் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் முருகன், துணைத் தலைவர்கள் சண்முகம், லோகநாதன், முத்துசாமி,மாவட்ட செயலாளர்கள் சங்கர், கார்த்தி, வக்கீல் முரளி, கொடுமுடி கார்த்தி, ரமேஷ், பட்டுராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கவின், விவேக், பழனிவேல், விஜய், சுதீஷ், சபரி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top