Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

கோபியில் வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் ரத்ததான முகாம்

ஈரோடு

கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவ அணி சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவ அணி சார்பில் கோபியில்  பேரணி மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

பேரணி மற்றும் முகாமை கனிமொழி, என் வி என் சோமு எம்பி எழிலன், நாகநாதன் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோபி கரட்டூரில் தொடங்கிய பேரணி, சத்தி ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக லா கள்ளிப்பட்டி வரை சென்றது. அதைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் செந்தில்நாதன், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுதாகர்,   மருத்துவர் அணி நிர்வாகிகள்,நகர செயலாளர் நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் திருநாவுக்கரசு,வெற்றி நிதி, செந்தில்குமார்,
கதிர்வேலு, மூர்த்தி ,பிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top