Close
செப்டம்பர் 20, 2024 7:01 காலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலை தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் பிற பணிகளை நிறுத்த வேண்டும். பிஎட் பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலர் வீ. ஜோதிமணி தலைமை வகித்தார், மாநிலப் பொதுச் செயலர் நா. சண்முகநாதன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் பி. ஜீவன்ராஜ், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் துரை பிரபாகர் உள்ளிட்டோர்பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top