புதுக்கோட்டை அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆக்கிரமfப்பு செய்வதாக புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
புதுக்கோட்டை அருகே வாகவாசல், ராஜாபட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக ராஜாபட்டியை சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக் கையில் எங்கள் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ கண் திறந்த அம்மன் திருக்கோவில் உள்ளது இந்த ஆலயத்திற்கு உட்பட்ட இடத்தை திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும் நாங்களும் பலமுறை கோட்டாட்சியர் வட்டாட்சியர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த பதிலும் அளிக்கவில்லையாம்.
இதையடுத்து, . திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்டு தரவேண்டும் என்ற பிரச்னையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




