பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஒன்றிய செயலாளர்கள் அருள் ஜோதி (எ) செல்வராஜ், வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, வார்டு கவுன்சிலர்கள் வளர்மதி, புனிதா, கோமதி, குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.