Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

ஸ்ரீ  வரதராஜ பெருமாள்  கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

வரதராஜபெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ  வரதராஜ பெருமாள்  கோயிலில் புரட்டாசி தமிழ்  மாதபிறப்பை  யொட்டி சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.
புதுக்கோட்டையில் கீழ 3  ஆம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி  தமிழ்  மாதப் பிறப்பை யொட்டி (18.09.2023) சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

ஆலயத்தில் மூலவர்   வரதராஜ பெருமாள்  சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை   நடைபெற்றது.

உற்சவர்   வரதராஜ பெருமாள்,   ஸ்ரீ  தேவி பூதேவி விக்னேஸ்வரர்   பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சந்நிதியின் சுற்றுப் பிராகாரத்தின்   உள்ள  அலமேலு மங்கை சக்கரத்தாழ்வார்  ஆஞ்சநேயர்    மலர்  அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top