Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

கோபி அருகேயுள்ள வன்னிமர விநாயகர்கோயிலில் சதுர்த்தி பெருவிழா

ஈரோடு

வன்னி மர விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்  லா.கள்ளிப்பட்டி பிரிவு ஸ்ரீ நகரில் ஸ்ரீ வன்னிமர விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது .

இக்கோயிலில்  நடந்த விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு  மகா கணபதிஹோமம், யாகப் பெருவிழா, மகா அபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.  செங்கோட்டையன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். யாக பூஜையில் ஸ்ரீநகர்  லா. கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  புதுப்பிக்கப்பட்ட கோயில் வளாகத்தை  கே.ஏ. செங்கோட்டையன்  திறந்து வைத்தார்.

ஈரோடு
நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சத்தியபாமா, நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் கவுன்சிலர் முத்துரமணன் செய்திருந்தார்.  இந்த யாகத்தை தொடர்ந்து பக்தர்கள் விநாயகர் பெருமான் மற்றும் மகாமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து செய்தனர். அதை தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top