Close
அக்டோபர் 5, 2024 10:30 மணி

புதுக்கோட்டையில் மாவட்ட சதுரங்கப்போட்டி… ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை  மாவட்ட சதுரங்க கழகம்  சார்பில்  மாவட்ட  அளவிலான சதுரங்க போட்டியில்  இளம் செஸ் வீரர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டை  மாவட்ட சதுரங்க கழகம்  சார்பில்  மாவட்ட  அளவிலான  15 வயதுக்கு உட்பட்ட  சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி புதுக்கோட்டை மா.மன்னர்  கல்லூரியில் (08.10.2023)  ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது.  போட்டியினை கல்லூரி  முதல்வர் (பொறுப்பு)  முனைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்து  தொடங்கி  வைத்தார்.

மேனாள் கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்   ராமையா  முன்னிலை வகித்தார். மாவட்ட செஸ் சங்க  செயலர் முனைவர்  கணேசன் அனைவரையும் வரவேற்றார்.  இப்போட்டியில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 165 இளம் செஸ் வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடினர்.

புதுக்கோட்டை
செஸ் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள்

ஏழு  சுற்றுக்களாக   போட்டி     நடை பெற்றது.  வெற்றியாளர்களுக்கு   வெற்றி கோப்பைகளும், பங்கு பெறும் அனைவருக்கும்   சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. வெற்றி பெறும்   செஸ் வீரர்களுக்கு  பரிசுப் பொருட்களை  மேனாள் கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் ராமையா  வழங்கினார். இப்போட்டியினை  பிடே  நடுவர்  அங்கப்பன்  தலைமையில் நடுவர் குழுவினர்    நடத்தினார்கள். செஸ் சங்க  துணைத் தலைவர் அடைக்கலவன் நன்றி  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top