Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் விளையாட்டு வீரர்கள் வசதிக்காக 3 மினி உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு

சென்னை

திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் விளையாட்டு வீரர்கள் வசதிக்காக 3 மினி உயர் மின் கோபுர விளக்குகள் திறக்கப்பட்டது

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பூந்தோட்ட பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள மைதானத்தில் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து போன்ற விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார் கள். பொதுமக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த மைதானத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரிடம் கோரிக்கை வைத்தனர்.இதை யடுத்து மாநகராட்சி நிதியிலிருந்து புதிதாக மினி உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில் விளையாட்டுப் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் மூலம் மின்விளக்கு பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தனர். அதே போன்று மாணவர்கள் வசதிக்காக ரூ.37 லட்சத்தில் நவீன கழிப்பிடம் கட்ட அடிக்கல் நாட்டினர்.இதில் மாநகராட்சி அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top