Close
அக்டோபர் 5, 2024 10:04 மணி

துப்புரவு பணியாளர்களுக்கு கௌரவம்…!

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை 'அண்டை பகுதியின் கதாநாயகர்கள்' என அழைத்து கௌரவப்படுத்தும் விழா

திருவொற்றியூரில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா பள்ளியும் திருவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கமும் இணைந்து துப்பரவு பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பள்ளி தாளாளர் ஜே. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தூய்மை பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியை பொதுமக்களும் சிறப்பு விருந்தினர்களும் மாணவ மாணவியரும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர் நிகழ்ச்சியில் மாவட்ட லயன் சங்க துணை ஆளுநர் ஏ.டி.ரவிச்சந்திரன் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் ஜி.வரதராஜன்,என். துரைராஜ், பி.பிரதாப் குமார், பி.வி.சுப்பிரமணி, ஏ.ஞானசேகர்,சி‌.முருகன், எம்‌. ராபின், எஸ்.டி. சங்கர், பள்ளி நிர்வாகிகள் ஹரிஹரன், அவந்திகா, முதல்வர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top