Close
செப்டம்பர் 20, 2024 8:51 காலை

புதுக்கோட்டை அருகே சாலை விபத்து: போலீஸார் 5 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருமயம் சாலையில் சாலை விபத்தில் சிக்கி உருக்குலைந்த கார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்புக்கு சென்ற 5  போலீஸார் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அனைவரும்  காயங்களுடன்  அதிருஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை  நடைபெற்றது.  இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், திருவள்ளூர் மாவட்ட போலீஸார்  பாதுகாப்பு பணியினை முடித்துவிட்டு  காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் புதுக்கோட்டை காரைக்குடி  தேசிய நெடுஞ்சாலையில்  திருமயம்  அருகே ஏனப்பட்டி அருகே வந்தபோது   லெனா விலக்கிலிருந்து வந்த  லாரி  எதிர்பாரா தவிதமாக மோதியதில்  போலீஸார்  சென்ற கார் நொறுங் கியது.  அதில் பயணம் செய்த ஐந்து  போலீஸாரும் காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இவ்விபத்தில் சென்னை சோழவரம் திருப்பாலை காவல் நிலைய காவலர் கிருஷ்ணமூர்த்தி (55), திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காவலர்   ராமமூர்த்தி (51) , கவரப்பேட்டை காவலர் செந்தில்குமார் (36) , கும்மிடிப்பூண்டி காவலர் ரவி(58 ) ஆரம்பாக்கம் காவலர் ரமேஷ் (58) என்பது தெரியவந்தது.

இவர்களை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம்  காவல்நிலைய போலீஸார்  விசாரணை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top