Close
அக்டோபர் 5, 2024 10:30 மணி

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள்

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

டாஸ்மாக் குடோன்களில் வேலை செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடமும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 29 முதல் டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மதுக் கிடங்கு நுழைவாயிலில் வியாழக்கிழமை வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மற்றும் டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் சி.ரெங்கராஜ் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.முத்துக்குமார், டாஸ்மாக் சுமைப்பணி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முருகன், பொருளாளர் ஆர்.பாலமுருகன், துணைத் தலைவர் வி.பிரபு உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top