Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நடந்த வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டிகள் நடத்தப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டிகளான விநாடி வினா, கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை ஏற்று தொடக்கி வைத்தார்.செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள  தகுதி பெறுவார்கள்.

தொல்லியல் நிறுவனர் மணிகண்டன் மோகனூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் அன்பழகன் செயல்பட்டார். இப்போட்டியில் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு முத்துக்குமார், விஜயராணி, கலைமணி , தங்கராசு, ராஜமாணிக்கம், சங்கர், உஷா, மலர்விழி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
.
முன்னாத ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் தொகுத்து வழங்கினார். இல்லம் தேடிக் கல்வி மைய வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் வரவேற்றார். நிறைவாக ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top