Close
அக்டோபர் 6, 2024 11:41 காலை

தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு, புகழ் அஞ்சலி

புதுக்கோட்டை

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் படத்திறப்பு, புகழ் அஞ்சலி நிகழ்ச்சி புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தோழர் என்.சங்கரய்யா  படத்திறப்பு, புகழ் அஞ்சலி நிகழ்ச்சி புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். தோழர் என்.சங்கரய்யா அவர்களின் உருவப்படத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் திறந்து வைத்து புகழ் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் ஆகியோர் புகழ் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், த.அன்பழகன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top