Close
அக்டோபர் 5, 2024 10:27 மணி

புதுக்கோட்டையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

புதுக்கோட்டை

ஆஞ்சநேயர் கோயில் வாராஹி அம்மனுக்கு முளைப்பாறி எடுத்துச்செல்லும் பக்தர்கள்

புதுக்கோட்டைஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவம் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்க்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப் ரோஷ்ணம் வைபவ விழா  நடைபெற்றது.

இதையொட்டி ஏராளமான பெண் பக்தர்கள் மாலையில் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து வராஹிதேவி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top