Close
அக்டோபர் 5, 2024 6:06 மணி

திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற வாழ்த்தரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய திருவருள் பேரவை நிர்வாகிகள்.

புதுக்கோட்டை மாவட்ட திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பரிமாற்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் திருவருள் பேரவைத் தலைவர் ஆர். சம்பத்குமார் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், செயலாளர் டாக்டர் சலீம், துணைத்தலைவர்கள் எஸ். முகமதுசபியுதீன், ஐ.பி.போப்ஞனையா, மாநில பிரதிநிதி மத்தியாஸ் , வர்த்தகர் கழகத்தலைவர் சாகுல்அமீது, செயலர் சவரிமுத்து, மூத்த வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஏ.இப்ராஹிம்பாபு ,

மூத்த முடிமக்கள் சங்கத்தலைவர் கே.ராமையா, மாவட்ட நுகர்வோர் குழுத்தலைவர் லதாஉத்தமன், ரோட்டரி நிர்வாகி ஆர்.கருணாகரன், கல்வியாளர் அந்தோணிசாமி, டெக்ஸ்மோ சிவா, கவிஞர்கள் பீர்முகமது, புதுகைப்புதல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற வாழ்த்தரங்கில் பங்கேற்ற திருவருள் பேரவை நிர்வாகிகள்.

பங்குத் தந்தை அருட்திரு.சவரிநாயகம்அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அலெக்சாண்டர், பங்கு மன்றத் தலைவர் ஆரோக்கியசாமி, செயலர் ஏ. சகாயராஜ் உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் திருவருள் பேரவை நிர்வாகிகளை வரவேற்றனர்.

புதுக்கோட்டை
மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் தேவாலாயத்தில் இயேசு பிறப்பு நிகழ்வை காட்சிப்படுத்தி அமைக்கப்பட்ட குடில்

இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து கேக் வெட்டினர். அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து களை பரிமாறிக் கொண்டனர்.

இதையடுத்து, மச்சுவாடி டிஇஎல்சி தேவாலயத்தில் நடைபெற்ற வாழ்த்தரங்கில், தேவாலய நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதில், திருவருள்பேரவை நிர்வாகிகள் மற்றும் சமய நல்லிணக்க ஆர்வலர்கள் திரளாளகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top