Close
அக்டோபர் 5, 2024 9:58 மணி

திருமயத்தில் களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை

புதுக்கோட்டை

திருமயம் கடைவீதியில் பொங்கல் பானை வாங்கிய பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு அதற்குத் தேவையான பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.

பொங்கல் பண்டிகை பொருள்களும், காய்கறிகளும் வாங்குவதற்கு திருமயம் கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
குறிப்பாக, திருமயம் பேருந்து நிலையம், கடைவீதி, ஸ்டேட் வங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கரும்பு, மண்பானை, மஞ்சள் கொத்து பொங்கலுக்குத் தேவையான பொருள்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
கரும்பு ஒரு கட்டு ரூ.200 முதல் 300 வரையிலும் ஒரு கரும்பு ரூ 40- க்கும், மண்பானை ரூ 100 முதல் 300 வரையிலும், ஆவாரம்பூ ஒரு கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துக் காணப்பட்டதாக பொதுமக்கள்தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top