Close
ஏப்ரல் 24, 2026 10:38 காலை

திருமயம் அருகே கார் மோதி காளைமாடு பலி

விபத்து- மாதிரி படம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதால் காளை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

திருமயம் அருகே கொசப்பட்டி அருகே கணமாய் ஓரம 5 மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த, மாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட மோதலில் அருகே இருந்த சாலைக்கு மாடுகள் தாவி ஓடின.

அப்போது ராமநாதபுரத்திலிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற மின்சார கார்  எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில் அடிபட்ட காளை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து மாட்டின் உரிமையாளரும் ஊனையூர் ஊராட்சித் தலைவருமான மல்லிகா அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீஸார் இராமநாபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் தினேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top