Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

திருமயம் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை

திருமயத்தில் அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற சர்வ மதத்தினர்

திருமயம்  சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ-வும் சட்டத்துறை அமைச்சருமான  எஸ். ரகுபதி தலைமையில் திங்கள்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது.

விழாவில் பங்கேற்ற  கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி, சேலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்  திமுக ஒன்றியச்செயலர் அழகுசிதம்பரம், முன்னாள் ஒன்றியச்செயலர் ஆர்.எம். கருப்பையா, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சுப.துரைராஜா, ஊராட்சித் தலைவர்கள் திருமயம் எம். சிக்கந்தர், மேலப்பனையூர் மேகநாதன்,  வி.லெட்சுமிபுரம் ஆதியப்பன்,  புலிவலம் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தேவி, நிர்வாகிகள், வெண்ணிலா, அழகுச்செல்வி, செல்வராணி, மீனாள்.

புதுக்கோட்டை
திருமயம் எம்எல்ஏ அலுவலத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே. ராமசாமி, வலைதள ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், இளைஞரணி நிர்வாகி லியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமயம் சந்தைப்பேட்டை புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சமத்துவபுரம் பொங்கல் விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். நிறைவாக கோனாபட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று கட்சிக்கொடி ஏற்றி அனைவருக்கும்  அமைச்சர் இனிப்பு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top