Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்:நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு  நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும்  செயல்களை குறித்து செய்தி வெளியிட்ட பல்லடம் தாலுகா நியூஸ் 7 சேனல் செய்தியாளர்நேசபிரபு என்பவரை நேற்று இரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், என்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகை யாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை அரசும், காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்து கிறது.

சமுக விரோத கும்பல்கள் பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களை தாக்கும் அவலம் தொடர்வது ஊடக சுதந்திரத்திற்கு பேராபத்து என்பதால் இவர்களை கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top