Close
அக்டோபர் 5, 2024 10:30 மணி

செங்கீரை  கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

புதுக்கோட்டை

செங்கீரை ஊராட்சியிலுள்ள விஏஓ அலுவலகத்தை மாற்ற கிராம சபைக்கூட்டத்தில் எதிர்ப்பு

செங்கீரை  கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகத்தை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் தாலுகா செங்கீரையில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இக்கட்டடம் செங்கீரை ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளது. பள்ளிக்கூடம், அங்கன்வாடி,நூலகம்,  விஏஒ அலுவலகம் , ஓவர்டேங்  போன்றவை  உள்ளன.

இங்குள்ள விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் 2 பேர் பணிபுரிகின்றனர். இந்த விஏஓ வட்டத்தில் செங்கீரை,ஆயிங்குடி,ராயவரம் என 3 கிராம ஊராட்சிகள்  அடங்கியுள்ளன.

தற்போதுள்ள விஏஓ  கட்டடம்  நல்ல நிலையில்  மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் விஏஓ அலுவலகத்தை செங்கீரையில் இருந்து  ராயவரத்திற்கு மாற்ற  அரசு நடவடிக்கை   எடுத்துள்ளது.

இதற்காக  ரூ8.90 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது..  இதற்கு  செங்கீரை  கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை  ஆட்சியருக்கு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  கடந்த 26 -ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி  அரசுக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால், கிராம சபைக்கூட்டத்தீர்மானம் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top