Close
அக்டோபர் 6, 2024 1:29 மணி

புதுக்கோட்டையில் வாலிபர் சங்க இரத்ததானக் கொடையாளர்களின் பேரணி-பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரத்ததானக் கழக மாநில மாநாட்டினையொட்டி குருதிக் கொடையாளர்களின் பேரணி-பொதுக்கூட்டம் சனிக்கிழமை   நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததானக்கழக மாநில மாநாடு பிப்.17, 18  -ஆகிய நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை திலகர் திடலில் இருந்து குருதிக் கொடை யாளர்களின் பேரணி நடைபெற்றது.

பேரணியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேளதாளம் முழுங்க, விண் அதிருமும் முழக்கங்களுடனும் நடைபெற்ற பேரணி வடக்குராஜவீதி, மேலராஜவீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை
பேரணியை தொடக்கி வைக்கிறார், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் எம். சஜார், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி, துணைத் தலைவர்கள் எஸ்.மணிகண்டன், எம்.பிரியங்கா, எல்.பி.சரவணத்தமிழன், துணைச் செயலாளர்கள் செல்வராஜ், பா.லெனின் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக வரவேற்புக்குழுச் செயலாளர் ஆ.குமாரவேல் வரவேற்றார்.  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரா.மகாதீர் நன்றி கூறினார். பேரணி-பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top