Close
அக்டோபர் 5, 2024 10:28 மணி

வாட்ஸ் அப் குழுவின் மூலம் மலர்ந்த ஈரநெஞ்சங்கள்…

தமிழ்நாடு

ஈரநெஞ்சம் அறக்கட்டளை

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் உடல் உறுப்பு செயலிழப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இன்னும் அதிகமாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.

விபத்து காரணமாகவோ உடல் நலக்குறைவு காரணமாகவோ மூளைச்சாவு அடையும் நிலை ஏற்பட்டால் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகும் உடல் உறுப்புகள் யாருக்கேனும் பயன்படட்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? அதை செய்வது எப்படி? அதற்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையும் பதிவு செய்யும் முறைகள் சிக்கலாகவும் இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் தொடர்பான transtan. tngov. in இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்ய முடியும் என்ற வழிமுறை தற்போது ஏற்படுத் தப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையில் பணியாற்றும் இளம் செல்வன் என்பவர் உடல் உறுப்பு தானத்திற்கு இணையவழியில் பதிவு செய்திருந்ததை அறிந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன்  ஏற்கெனவே உடல் தானத்திற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்திருந்த போதிலும் தற்போது உடல் உறுப்பு தானத்திற்கு இணைய வழியில் பதிவு செய்து அதற்குரிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஈரம் செய்திகள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களில் மட்டுமே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானத்திற்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

இது மிகவும் போற்றுதலுக்குரிய விஷயம். ஒரு விளக்கின் சுடரில் இருந்து ஆயிரம் விளக்குகள் சுடர் பெற்று ஒளிர்வது போல விளம்பர நோக்கத்தோடு அல்லாமல் நமது செய்திகள் குழுவில் வெளியிடப்பட்ட உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு பல பேரை சென்றடைந்து உள்ளது.

தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட மற்ற உயிர்களை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்கள் அனைவருமே வாழும் கடவுள்கள் தான். அவர்களது செயல்
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியது.

உடல் உறுப்பு தானம் செய்வதற்குப் பதிவு செய்தவர்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு…

இளம் செல்வன், திருப்பூர்.
மகேந்திரன்,கோவை.
பாரதி, கோவை.
ஈடித் ரேனா, புதுகை.
நித்யா, விருதுநகர்.
ராஜேந்திரன், விருதுநகர்.
சம்விதா, கோவை.
தேவராஜ், கோவை.
செந்தில், கோவை.
அமுதா, ராசிபுரம்.
பிரேம், விருதுநகர்.
அன்புச்செல்வன்,உதகை.
முருகேசன்,உதகை.
அனிதா, சென்னை.
மணிவேல், சென்னை.
ஆரோகியசாமி,புதுகை.
இன்ப தமிழ், புதுகை.
உதயாராஜ், ராசிபுரம்.
நீலகண்டன், சேலம்.
கண்ணன், கோவை.
புஷ்பா, பொள்ளாச்சி.
முனியப்பன், பழனி.
கிஷோர், ஈரோடு.
முத்துசாமி, அவிநாசி.
வனிதா, கோவை.
ஜெயராஜ், கோவை.
அன்னக்கொடி, திருச்சி.
முருகானந்தம், திருச்சி.
நல்லதம்பி, திருச்சி.
ஈஸ்வரன்,குன்னூர்.
சந்திரன், விருதுநகர்.
சுந்தர்.எஸ், விருதுநகர்.
புருஷோத்தமன், திண்டுக்கல்.
மணிகண்டன், கரூர்.
பார்க்கவி, மதுரை.
லட்சுமணன், மதுரை.
நீலகண்டன், மதுரை.
வேல்முருகன், கோவை.

~ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top