Close
அக்டோபர் 6, 2024 12:40 மணி

புத்தகம் அறிவோம்.. வஉசி -யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

புதுக்கோட்டை

புத்தகம் அறிவோம்- வஉசியும் காந்தியும்

கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கை கொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி செய்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916ல் வந்து சேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் நிகழ்ந்து வந்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் வ.உ.சிக்கு பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. – காந்தி கடிதப் போக்கு வரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு ஆ.இரா.வேங்கடாசலபதியின் “வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா ” நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது.

தென்னாப்பிரிக் தமிழரின் பின்புலம், அவர்களுக்கும் வ.உ.சிக்குமான தொடர்பு ஆகியவற்றையும் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சியின் மனைவி மீனாட்சி அம்மாள் அனுபவித்த துயரங்கள் அதை அவர் எதிர்கொண்ட விதம் யாவற்றையும் வாசிக்கும் போது துயரந்தருவதாகவும் அதே நேரத்தில் அவரின் பெரும் ஆளுமையையும் கண் முன் நிறுத்துகின்றது இந்நூல்.

காந்தி, வ.உ.சி இன் கடிதங்களும் நூலின் பின்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது வாசிப்பாளர் பார்வைக்கு.வரலாற்று மாணவர்கள் ,வ.உ. சி., காந்தி நேசர்கள் வாசிக்க வேண்டிய நூல். காலச்சுவடு வெளியீடு ரூ.140.

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top