Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

மொரப்பூர் பகுதியில் கூட்டணி ஒதுக்கீடுக்கு முன்பே அதிமுக சின்னம் வரைவதில் தீவிரம்..!

தர்மபுரி மாவட்ட லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் கூட்டணி ஒதுக்கீடுக்கு முன்பே அதிமுக இரட்டை இலை சின்னம் வரைவதில் தீவிரம் காட்டி வருகிறது

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம்  எம்பி தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னம் சுவரில் வரைவதில் முந்திக் கொண்டு தீவிரம் காட்டி வருகின்றனர்.

 ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே அதிமுக தான் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடும் என்ற உறுதியில் சின்னம் வரைவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக இணைவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் பாமக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது.

வேறு கட்சிகளும் இன்னும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு வராத போதும். அதிமுக தொண்டர்கள் சின்னம் வரைவதற்கான வேலையில் ஜரூராக ஈடுபட்டுள்ளனர். எங்கெல்லாம் வெற்றுச் சுவர் இருக்கிறதோ அங்கெல்லாம் இரட்டை இல்லை சின்னத்தை வரைந்து இடத்தை பிடித்து வருகின்றனர்.

கூட்டணியே முடிவு ஆகாத நிலையிலும் அதிமுக சின்னம் வரைவதில் தீவிரம் காட்டி வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகத்தான் ப்பார்த்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top