மதுரை:
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் இருந்து காளவாசல் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வந்த இளைஞரின் பைக் மோதி முதியவர் காயமடைந்தார்.
பழைய தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எல்லீஸ் நகர் பிரிவு சாலையில் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் பாதசாரிகள் நடப்பதற்கான, சிக்னல் போட்டு இருந்தது அதையும் மதிக்காமல் அதிவேகமாக பைக்கை இயக்கியுள்ளார்.
அப்பொழுது சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக சாலையைக் கடந்த பைக் மோதியது. அதில் பயணித்த இளைஞர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் . இதில், இருவருமே படுகாயம் அடைந்தனர் உடனடியாக போக்குவரத்து போலீசார், முதியவர், இருசக்கர வாகனம் ஓட்டியாவர் இருவரையும் சாலையில் ஓரத்தில் அமர வைத்தனர்.
பின் இளைஞர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆட்டோ மூலமாக அனுப்பி வைத்து படுகாயம் அடைந்த முதியவரை 108 அவசரகால உறுதி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போலீசார் எவ்வளவு சொல்லியும் நாளுக்கு நாள் இதுபோன்று இளைஞர்கள் அதிவேகமாக சிக்னலையும் மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல் சாலையை கடக்கும் நபர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அவர்களும் காயப்பட்டு நடந்து சாலையைக் கடக்கும் நபர்களையும் காயப்படுத்தி அவர்கள் குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இதுபோன்று செய்யும் இளைஞர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து நிரந்தரமாக லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் ,சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளை கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று இனி நடக்காத அளவுக்கு தண்டனைகள் கொடுத்தால் தான் விபத்துக்கள் குறையும் என கூறுகின்றனர்.