Close
பிப்ரவரி 24, 2025 10:12 மணி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிறந்தார்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 650 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலித்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,560 மதிப்பில் காதொலி கருவிகள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.78 லட்சம் மதிப்பில் செயற்கை கால் என மொத்தம் 5 பேருக்கு ரூ. 2.84 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ராசிபுரம் தாலுகா, கீழூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ராஜாமணி என்பவரின் வாரிசுதாரருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், சமூகப்பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரச அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top