Close
மார்ச் 4, 2025 9:48 மணி

ஆரி ஒர்க் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்..!

பயிற்சி முடித்த மாணவிகள்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் சமூகப்பணி அறக்கட்டளை மற்றும் மதுரை பெட்கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு இலவச ஆரி ஒர்க் பயிற்சி 3 மாதம் நடந்தது.

இந்த பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு ஜி எச் சி எல் அறக்கட்டளை நிதி பங்களிப்பு அலுவலர் சுஜுன் தர்மராஜ் தலைமை தாங்கி ஹைசான்றிதழ்கள் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பயிற்சிக்கு பின் சுயதொழில் முனைவோராக மாறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. சந்தைப்படுத்துதல் ,நிறுவனங்களில் பணிபுரிதல், மானியத்துடன் வங்கி கடன் பெறுவது – தரம் உயர்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்காக விற்பனை கூடங்கள் மாவட்டம் ஊராட்சி வாரியாக அமைப்பது பற்றியும் விளக்கமாக கூறப்பட்டது.

இதில் உதவி அலுவலர் வெங்கடாசலம் பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி, அலுவலர்கள் நர்மதா ,மீனாட்சி பயிற்சியாளர்கள் அஞ்சலை , பிர்லா,ஜமுனாதேவி ,ஜெகதீஸ்வரி உள்பட.வடக்கிப்பட்டி,முத்துப்புடையான்பட்டி ,குமாரப்பட்டி, நம்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top