மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கிவைத்தார்.
பின்னர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புடவைகளை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் மாணிக்கம், மேலாளர் செந்தில் வேல் , முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் குழு உறுப்பினர் ஸ்டாலின, மேலாளர் பாடலிங்கம் , துணை மண்டல மேலாளர் தீபா ஆகியோர் உடன் உள்ளனர்.