சோழவந்தான்:
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது.
டிஜே பரத் தலைமையில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சோலை நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகம் கார்பன் ஜனார்த்தனன், முரளி கார்த்திக்,அன்பு, பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.