காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழக பாஜகவின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே தென்காசி மாவட்ட பாஜகவினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தென்காசி நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினார் பங்கேற்று தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய நிலையில், தேச விரோதிகள் மீதும் தேச துரோகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது பாஜகவினர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.




