Close
ஜூன் 6, 2025 5:58 மணி

பாலமேடு முத்தாலம்மன் ஆலய உற்சவ விழா..!

பாலமேடு அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு, தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா புதன்கிழமை பூசாரி வீட்டில் இருந்து புறப்பட்டு அருள்மிகு முத்தாலம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,
எட்டாம் நாள் கோவில் வில்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, உற்சவ விழா மங்கள இசை உடன் தொடங்கியது. 14 ஆம் நாள் புதன்கிழமை நாயுடு உறவின் முறையில் இருந்து புறப்பட்டு பூசாரி வீட்டில் இருந்து மேளதாளங்கள் முழங்க மரவெட்டி சென்று அம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, 29ஆம் தேதி வியாழக்கிழமை முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நேரத்துக்கு தீச்சட்டி எடுத்தல் பால்குடம் எடுத்தல் பொது அபிஷேகம் நடைபெற்றது. நாயுடு இளைஞர் சங்கம் சார்பாக ,அபிஷேகம் மாலை முளைப்பாரி ஊர்வலம் வெள்ளிக்கிழமை காலை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றன.

அன்று மாலைமஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம் திருப்பூர் நாயுடு இளைஞர் சங்கம் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top