Close
ஏப்ரல் 23, 2026 11:27 மணி

பள்ளி பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு அபிராமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பாராட்டு

புதுக்கோட்டை

புதுகை அபிராமி நகரில் மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா

புதுக்கோட்டை: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை அபிராமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்  பாராட்டு விழா நடத்தியது.

பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ந.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாமன்ற உறுப்பினர் செ.அடைக்கலம் மற்றும் சங்க நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். நிர்வாகிகள் நந்தகுமார், பாலமுருகன், கார்த்திக்கேயன், மோகன், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக செயலாளர் கி.நாகராஜன் வரவேற்றார். பொருளாளர் சி.நாகராஜன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top