Close
ஜூன் 10, 2025 2:24 காலை

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் : கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

தமிழ்நாடு அரசின் நீர்நிலை பாதுகாவலர் விருதினைப் பெற்றறுள்ள, நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த, சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியவாதி ரமேஷிற்கு, கலெக்டர் உமா பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 14 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 421 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை பரிசீலனை செய்து, உரிய அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 14 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசின் நீர்நிலை பாதுகாவலர் விருதினை பெற்றறுள்ள நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த, சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியாவதி ரமேஷிற்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ சுமன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கிருஷ்ணவேனி, ஆர்டிஓ சாந்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவரல்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top