Close
ஜூன் 15, 2025 2:26 காலை

விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் சோலார் எச்சரிக்கை விளக்கு..!

சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் சிக்னல்

விபத்துக்களை குறைக்க காஞ்சிபுரம் கோட்டை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோலார் இணைப்புடன் கூடிய எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலை காஞ்சிபுரம் வந்தவாசி சாலை ஆகியவற்றில் அதிக அளவு வாகன போக்குவரத்து உள்ளது.

தொழிற்சாலை வாகனங்கள் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் என பல ஆயிரம் பயணிக்கும் நிலையில் விபத்துக்களை குறைக்கும் வகையில் முக்கிய விபத்து பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் இணைப்புடன் கூடிய எச்சரிக்கை மின்விளக்கு பொருத்த திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில், கீழ்பெரமநல்லூர் , ஆர்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 எச்சரிக்கை விளக்குகளும், காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் செவிலிமேடு சந்திப்பு பகுதியில் இரண்டு எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரம் செயல்படும் வகையில் சோலார் பேனல்கள் உடன் இது அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு கவனத்துடன் வாகனத்தை செலுத்த ஏதுவாக உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top