Close
ஜூன் 15, 2025 4:34 மணி

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு..!

வழக்குகளுக்கு தீர்வு அளித்து அதற்கான சான்றுகளை வழங்கிய நீதிபதி.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய் 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (National LokAdalat) தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்மிகு Pa.U.செம்மல், துவக்கி வைத்தார்.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கிவாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

காஞ்சிபுரம் வட்டம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டவழக்குகள் மொத்தமாக 1913 இதில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டுள்ளது.

வங்கி வழக்குகள் மொத்தம் 1140 வழக்குகள் எடுக்கப்பட்டு 55 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ரூபாய். 31,52,000/-தெகை வசூலிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் நீதிபதிகள் S.மோகனகுமாரி , S. சுஜாதா , K.S. அருண் சபாபதி, T. திருமால் , B.சந்தியாதேவி, D. நவின் துரை பாபு, வழக்கறிஞர் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top