Close
ஜூன் 18, 2025 11:25 மணி

கலசப்பாக்கம் அருகே விசிக பிரமுகர் வெட்டி படுகொலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் அக்ரி காமராஜ். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளா்.

இந்த நிலையில் நாயுடுமங்கலம் ரயில்வே கேட் அருகே அக்ரி காமராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கலசப்பாக்கம் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து காமராஜ் தம்பி ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமன் உள்ளிட்ட 6 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top