Close
மார்ச் 7, 2026 4:57 மணி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்லில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் பங்கேற்போர்களுக்கான, பயிற்சி முகாமில் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல்:

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு, நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து முழுமையான கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள சமுதாய வழி நடத்துனர்கள், சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள் என பல்வேறு நிலையில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 19 வட்டாரங்களில் 190 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்திற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி நடைபெறுகிறது. அரசின் திட்டங்கள் குறித்து அறியாத கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இப்பயிற்சியை 190 பேருக்கு இன்று அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்கள் இக்களப்பணியினை உணர்வுபூர்வமாகவும், உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் இச்சமூகத்தில் முழுமையாக வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top