Close
மார்ச் 7, 2026 8:01 மணி

பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்கிட ரூ. 1 லட்சம் மானிய உதவி..!

மாவட்ட கலெக்டர் உமா

நாமக்கல்:

டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்டசி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இண்டர்நெட் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள்(ஜிஐஜி), வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பதிவு பெற்ற பெண், திருநங்கை டிரைவர்களுக்கு சொந்தமாக ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ. 1,00,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்வதற்கு வசதியாக நாமக்கல், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் டிஎன்யுடபிள்யுடபிள்யுபி.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பம் அப்லோட் செய்யலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நல வ õரியம் பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top