Close
மார்ச் 7, 2026 6:03 மணி

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு போட்டிகள் :அமைச்சர் துவக்கி வைத்தார்..!

திறமையான மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் :

இந்தியாவில் முதன்முறையாக நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயிலில் பெங்களுருக்கு 250 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஹேக்கத்தான் பயணத்தை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் & திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டி அருகில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபடியே ரயில் ஹேக்கத்தான் (ரயில் தீர்வோட்டம்) போட்டி நடைபெற்றது.

இந்த ரயில் பயணம் துவக்கவிழா நாமக்கல் ரயில் நிலையத்தில், கல்லூரி சேர்மன் பெரியசாமி தலைமையில் ந¬¬பெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கி பயணத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ரயிலில் ஹேக்கத்தான் போட்டி நடத்துவது இதுவே முதல் முறை. ரயிலில் பயணம் செய்தபடியே ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்பது மாணவர்களுக்கு புதுமையாக இருக்கும். பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வது, புதிய அனுபவமாக இருக்கும். இதுவரை நான் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது இல்லை.

தமிழ்நாடு அரசு, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு அவர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து, கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் அதிக வேலை வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கும். மாணவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது என்று கூறினார்.

காலை 8:30 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த மதுரை- & பெங்களூர் வந்தே பாரத் ரயிலில், அக்கல்லூரி மாணவ – மாணவிகள் 200 பேர் மற்றும் பணியாளர்கள் 50 பேர் உட்பட 250 பேர் இந்த பயணத்தை மேற்கொண்டனர். வந்தே பாரத் இரயிலில் 9 மணி நேரம் இடைவிடா திறனாய்வு போட்டியாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் புதிய சவால்கள், போட்டி நிலைகள் எதிர்கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட்டது.

இந்த பயணத்தின்போது ஒரே நேரத்தில், ஆப்டிடியூட் டெஸ்ட், டெக்னிக்கல் சவால்கள், கம்யூனிகேஷன் அசஸ்மென்ட், மாக் இண்டர்வியூ, ரயில்வே துறையின் சேவைகளை மேம்படுத்த செயற்கை ஏஐ மூலம் தீர்வு காணுதல் ஆகிய பல்வேறு பரிசோதனைகளில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

சவால்களுக்கான தீர்வுகளை ரயில் பயணத்தின்போது 9 மணி நேர கால அவகாசத்தில் மாணவர்கள் நிறைவு செய்தார்கள். நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கல்வி நிறுவன செயலாளர் தங்கவேல், இணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top