Close
மார்ச் 7, 2026 5:07 மணி

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பிரிவு உபசார விழா..!

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், டி.கோஆப் பயிற்சி முடித்தவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், 2024-25ம் ஆண்டின், முழு நேர டிப்ளமோ பயிற்சி முடித்த மாணவ, மாணவியருக்கான ஆண்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய முதல்வரும், துணைப்பதிவாளருமான செல்வகுமார் தலைமை வகித்தார். நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ஜேசுதாஸ், துணைப்பதிவாளர்கள் செல்வி, இந்திரா, பாலசுப்பிரமணியன், பால் ஜோசப் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு 100 மீ., 200 மீ., 1,200 மீ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வாலிபால் உள்ள உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விரிவுரையாளர்கள் கோவிந்தராசு, காயத்ரி, சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top