Close
மார்ச் 7, 2026 6:03 மணி

தென்காசி மாவட்ட நூலகத்திற்கு தேவநேய பாவணர் பெயரை சூட்ட வேண்டும்..!

தேவநேய பேனா இயக்கத்தினர்

தென்காசியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தென்காசி மாவட்ட நூலகத்திற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால்  மொழி ஞாயிறு என்று பட்டம் சூட்டப்பட்ட தேவநேய பாவணர் பெயரை வைக்க வேண்டும் என்று தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பாலசுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தென்காசியில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேவேந்திர பேனாக்கள் இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக தேவேந்திர குல வேளாளர்  இளைஞர்களின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  14 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தில்  செயல்பட்டு வருகின்றனர்.

பேனாவால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்ற குறிக்கோளை கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசால் பட்டியலின மக்களுக்காக செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறையை பட்டியலின நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அனைத்து மாவட்ட நூலகங்களுக்கும்  மொழி ஞாயிறு என்று எம்ஜிஆர் பட்டம் சூட்டிய தேவநேய பாவணர் பெயரை வைக்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தென்காசியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நமது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பிறந்த தேவநேய பாவணர் பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேவேந்திர பேனாக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது என்று பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top