நாமக்கல்:
சோஷியல் மீடியாவில் தவறான கருத்தை பதிவிட்டதாக பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு, நாமக்கல் மாவட்ட பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ இளைரணி நிர்வாகியாக பிரவீன்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 மாதம் முன்பு தனது எக்ஸ் தளத்தில் ஒரு மதத்தை குறித்து தவறாக தகவல் பதிவிட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து பிரவீன்ராஜ் சென்னை ஐகோர்ட்டில மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்று பெற்றுள்ளார்.
இந்த நிலையில் போலீசார் அவருக்கு எவ்வித வாரண்டும் அனுப்பாமல் திடீரென்று அவரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்த பொருட்களை கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தகது.
பிரவீன்ராஜ் கைது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜவும், வக்கீல் அணியும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.




