Close
மார்ச் 7, 2026 8:01 மணி

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் : காஞ்சியில் தொமுச, சிஐடியு, ஐஎன்டிசியு சார்பில் போராட்டம்..!

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறுதல், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது.

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தினை இன்று அறிவித்திருந்தனர்.

தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறுதல் விவசாயிகள் விரோத சட்டத்தின் திரும்ப பெறுதல் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றுதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி இந்த அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் தொமுச, சிஐடியு, ஐ என் டி சி யு மற்றும் தொழிற்சாலை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் என்று காஞ்சிபுரம் தேரடி அருகே ஒன்று கூடி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.

ஊர்வலமாக செல்ல முயன்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்யும்போது இரு தரப்பிற்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் இந்த மறியல் போராட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top