Close
மார்ச் 7, 2026 4:41 மணி

காஞ்சிபுரம் அருகே மறு நடவு செய்த அரச மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..! அதிர்ச்சியில் பசுமை ஆர்வலர்கள்..!

தீ வைத்து எரிக்கப்பட்ட மரத்தை சாக்குப்போர்வையால் மூடி வைத்துள்ள இயற்கை ஆர்வலர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரம் அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு செய்து, பசுமை ஆர்வலர் மேகநாதன் மற்றும் விழுதுகள் அமைப்பினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

இது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஜேசிபி , 4 ராட்சத கிரேன் மற்றும் ட்ரெய்லர் லாரி உதவியுடன் ஆலமரம் வேருடன் எடுக்கப்பட்டு சுமார் 2 லட்சம் மதிப்பில் செலவு செய்து காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதிக்கு எடுத்து சொல்லப்பட்டு சாலை ஓரம் கடந்த 13.05.2024ல் மறு நடவு செய்யப்பட்டது.

மேலும் அது மீண்டும் வளர்ச்சி பெற தேவையான பணிகளையும் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டாக பசுமை ஆர்வலர்கள் செய்து வந்தனர். மரம் துளிர் விட ஆரம்பித்ததால் பசுமை ஆர்வலர்களும் அவ்வழியே செல்வர்களும் மகிழ்ச்சியுற்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென அந்த ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் மரம் சேதமடைந்தது.

இது குறித்து உடனடியாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையிலும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இந்த செயல் பசுமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு தீ வைக்கும் அளவிற்கு கொடிய மனம் கொண்ட நபர்களின் மனநிலை வேதனை அளிப்பதாகவும், பசுமை ஆர்வலர் பசுமை மேகநாதன் தெரிவித்தார். இப்பணிக்காக நூற்றுக்கணக்கான தங்களது ஓய்வு நேரத்திலும் பணி செய்த நிலையில் மனதிற்கு பெரும் வருத்தத்தை தங்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top