Close
மார்ச் 7, 2026 4:57 மணி

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா..!

முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா. அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

தமிழகம் முழுவதும் இன்று முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி மேலப்புலியூர் பகுதியில் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகுமுத்து கோனின் திருவுருவப்படத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்மான பழனி நாடார், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் முகமது அலி, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலாமணி,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாரதி முருகன்,காங்கிரஸ் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், திமுக நகர பொருளாளர் சேக்பரீத்,பாஜக நகர துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான சுனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முத்து கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top