தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்நாளை ஆறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுவதாக கூறினார்.
அதன்படி புளியங்குடி, ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
புளியங்குடியில் வார்டு எண் ஒன்று மற்றும் இரண்டுக்கும் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் வார்டு எண் 1 முதல் 7 வார்டுகளுக்கும் நடைபெறும். ஆலங்குளத்தில் புதுப்பட்டி ஊராட்சிக்கும், வாசுதேவநல்லூரில் நெல்கட்டும்செவல் ஊராட்சிக்கும், சங்கரன்கோவிலில் வீரசிராமணி ஊராட்சிக்கும், செங்கோட்டையில் புளியரை ஊராட்சிக்கும் உங்களுடன் ஸ்டாரின் முகாம் நடைபெற உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு முகாமில் தனி பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர் அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடைபெறும் என்பதால் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே முகாமில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
நிபா வைரஸை பொருத்த அளவில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனை சாவடியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக வருவாய்த்துறை, கால்நடைத்துறை, மற்றும் காவல்துறை அங்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள் நிவா வைரஸ் பரவுவது குறித்து உரிய அறிவுரைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்தை பொருத்த அளவில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
குற்றாலத்தில் சாரல் திருவிழா19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழா 20 ஆம் தேதி தொடங்கும். என்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதனை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைப்பதாகவும் அவர் கூறினார்.




