Close
மார்ச் 7, 2026 8:01 மணி

காவிரி, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்..!

மேட்டூர் அணை -கோப்பு படம்

நாமக்கல்:

மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சபங்கா, திருமணி முத்தாறில் இணைக்க கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில், மேட்டூர் அணை காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; காவிரி ஆற்றில், 5 கி.மீ., தூரத்திற்கு, ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். மாநில செயலாளர் வக்கீல் சதீஸ்குமார், துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செலாளர்கள் பன்னீர்செல்வம், சுப்ரமணியன் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top